டைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...



உலகின் மிகவும் ஆடம்பர கப்பலாக வர்ணிக்கப்படும் டைட்டானிக் இப்போதுள்ள எந்தவொரு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றபோது தனது கன்னிப் பயணத்திலேயே அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது.
நூற்றாண்டை கடந்துவிட்டாலும், 1500 பயணிகளை பலி வாங்கிய இந்த விபத்தை உலகின் மிக மோசமான கடல் விபத்தாக கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பலின் ஆடம்பரத்தையும், அந்த கோர விபத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக டைட்டானிக் திரைப்படமும் வெளிவந்து நம் உள்ளங்களை உலுக்கியது. இந்த நிலையில், டைட்டானிக் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.
கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.
டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது.

புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக இருந்தது.

மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தை கொண்டது டைட்டானிக்.
மணிக்கு 23 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.


டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 2 நூலகங்கள் மற்றும் 2 முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.
நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் 4 புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், மூன்று மட்டுமே புகை வெளியேற்றுவதற்கானது. மீதமுள்ள ஒன்று அழகுக்காக பொருத்தப்பட்ட டம்மி புகைப்போக்கி குழாய்.
டைட்டானிக் கப்பலில் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் அதிகம்.

நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.

சீயானுக்கு சீயான்!

'ஐ’ படத்துக்காக பல கிலோக்கள் எடை குறைந்த சீயானுக்கே சீயான் ஒருவர் ஹாலிவுட்டில் இருக்கிறார் தெரியுமா? சொல்லப்போனால், சீயானுக்கே இந்த உடல் குறைப்பு மேட்டரில் சார்தான் ரோல்மாடல். இதுவரை உடல் எடை கூட்டியும் குறைத்தும் இவர் அளவுக்கு யாரும் ரிஸ்க் எடுத்தது இல்லை என அகில உலக அளவில் கொண்டாடப்படுகிறார். அவர், 40 வயதான கிறிஸ்டியன் பேல்.
சர்க்கஸ் வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஏழை அம்மாவுக்கும் தென் ஆப்பிரிக்காவில் கமர்ஷியல் பைலட்டாக இருந்த தந்தைக்கும் மகனாகப் பிறந்தவர். 16 வயதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு டி.வி விளம்பரங்களில் நடித்தவர், 13-வது வயதிலேயே மோதிரக் கையால் குட்டு வாங்கி விட்டார். ஆம். 1987-ல் தன் 'எம்பயர் ஆஃப் தி சன்’ (Empire of the Sun)  படத்தில் வாய்ப்புக் கொடுத்தது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.  இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய முகாமில் மாட்டித் தவிக்கும் இளைஞனாக நடிப்பில் மிரட்டியிருந்தார். உடனே வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்தது 2000-ம் ஆண்டில் பேட்ரிக் பேட்மேன் இயக்கத்தில் நடித்த 'அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) படம்தான். சைக்காலஜிகல் த்ரில்லர் படமான 'அமெரிக்கன் சைக்கோ’ இவருடைய நடிப்பில் புதுப் பரிமாணத்தை வெளிக்காட்டியது.
அதன் பிறகு 2004-ல் 'தி மெஷினிஸ்ட்’ (The Machinist)  என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரக்டருக்காக மெனக்கெடும் 'மெத்தட் ஆக்டர்’ என்ற பட்டம் கிடைத்தது. ஏனென்றால் 63 பவுண்டுகள், அதாவது 28 கிலோ எடையைக் குறைத்தார். 55 கிலோவுக்கும் குறைவாக எடை இருந்ததால், ஆளே பார்க்க எலும்புக்கூடாகக் காட்சி அளித்தார். இன்சோம்னியாவால் பீடிக்கப்பட்டு வேலை இழந்த ஒரு தொழிலாளியின் கதை என்பதால், கேரக்டராகவே மாறிப்போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தார். அது மட்டுமல்ல. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த அகில உலக பாப்புலர் பேட்மேன் படங்களான பேட் மேன் பிகின்ஸ்(Batman Begins) (2005), தி டார்க் நைட்(The Dark Knight)(2008), தி டார்க் நைட் ரைஸஸ் (The Dark Knight Rises) (2012)படங்களில் 'மெக்கோ’ உடற்கட்டோடு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து மிரட்டி இருந்தார்.
2010-ல் ரிலீஸான 'தி ஃபைட்டர்’ படத்தில் மீண்டும் 86 கிலோவிலிருந்து 66 கிலோவுக்குத் தன் எடையைக் குறைத்தார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே அப்படியே ஆளே மாறி வந்து நிற்பார். 2012-ல் 'தி டார்க்நைட் ரைஸஸ்’ படத்தில் 90 கிலோவுடன் செம மேன்லியாக நடித்து இருந்தார். 2013 டிசம்பரில் ரிலீஸான, 'அமெரிக்கன் ஹஸில்’ படத்தில் சற்று உடல் வெயிட் போட்டுத் தொப்பை ஆசாமியாக மாறி இருக்கிறார். 10 அகாடமி அவார்டுக்காக அந்தப் படம் நாமினேட் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 43 பவுண்டுகள் தன் எடையை ஏற்றியிருக்கிறார். செயற்கையாகக் கொஞ்சம் உடலைப் பின்புறமாக வளைத்து மூன்று இஞ்ச்கள் உடல் உயரத்தையும் கம்மியாக்கி ஆளே மாறிவிட்டார்.
முதல் நாள் ஷூட்டிங் போனவரை பிரபல நடிகர் ராபர்ட் டி நீரோவிடம் படத்தின் இயக்குநர் அறிமுகப்படுத்திவைத்தபோது, 'யார் இந்த மனிதர்?’ என்று கேட்டவர், பின்பு உண்மை தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
விருதுகள் காத்திருக்கின்றன தல!

அமெரிக்காவின் இராணுவ பலத்தை பாருங்க...!

 
இன்றைக்கு உலகையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரே நாடு எது என்றால் அது அமெரிக்கா தான் உலகை மிரட்டுவது என்பது சாதாரண செயல் அல்ல.
அதற்கு முழு இராணுவ பலத்தையும் பெற்று இருக்க வேண்டும் இதோ இதுதாங்க அமெரிக்காவின் முழு இராணுவ பலம். இது இருப்பதால் தான் அமெரிக்கா உலகை மிரட்டி வருகிறது இதோ அமெரிக்க இராணுவ வீரர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்...


முற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.....!

அறிவியல் என்பது மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது எனலாம், இன்று வெளிநாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் நம் நாட்டை 
சார்ந்தவர்கள் தான். ஆனால் இன்று பல்வேறான மக்கள் அறிவியலை தவறாக புரிந்து கொண்டிருகிறார்கள். அதாவது சில இயற்கையான விஷயங்களை தான் சொல்கிறேன் .டெக்னாலஜியும் அறிவியலும் ஒன்றுதான் அறிவியலின் உதவியுடன் தான் டெக்னாலஜி இயங்கிக் கொண்டிருகிறது. ஏனெனில் அறிவியலையும் டெக்னாலஜியையும் சரியாக புரிந்து கொள்வது என்பது இன்றியமையாதது. இப்பொழுது அறிவியலில் நாம் தவறாக புரிந்து கொண்ட சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போமா.
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.
வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.
சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.
மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.
தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.
மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.